சனி, டிசம்பர் 30, 2017

அல்லாஹ்வின் சட்டமே மேலோங்கும்.

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ 
அல்லாஹ்வின் சட்டமே மேலோங்கும்.

புதிய முத்தலாக் தடை சட்டத்தால் நடக்கப் போவது என்ன ?
நாம் செய்யப் போவது என்ன ?


பல நாட்கள் இரவு பகலாக அமர்ந்து நீதிபதிகள் இயற்றிய முத்தலாக் தடை சட்டத் தீர்ப்பு அவர்களையே அறியாமல் மத்ஹபு வாதிகளால் முடக்கப்பட்டிருந்த அல்லாஹ்வின் தலாக் சட்டம் செயல்வடிவம் பெறுவதற்கு வழிவகுக்கப்பட்டுள்ளது.
இறைமறுப்பாளர்கள் வெறுத்தபோதிலும் அல்லாஹ் தன் கட்டளையை நிறைவேற்றியே தீருவான் என்று இதை தான் அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்.
ஒரு பக்கம் முஸ்லீமாக இருந்துக்கொண்டே தலாக் விஷயத்தில் அல்லாஹ்வின் சட்டத்தை முழுமையாக அறியாமல் அல்லது அறிந்துகொண்டு முன்னோர்கள் இயற்றிய மத்ஹபு சட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தனர்.
முற்றொரு பக்கம் இஸ்லாமிய சட்டத்தில் கை வைத்து சிதைக்க வேண்டும் என்ற சங்பரிவாரின் நீண்ட நாள் திட்டம்.
இந்த இரண்டு வகையறாக்களின் சூழ்ச்சியை முறியடித்து தலாக் விஷயத்தில் தனது கட்டளையை இந்த புதிய தடை சட்டத்தின் மூலம் அல்லாஹ் மேலோங்கச் செயதுள்ளான்.
முத்தலாக் கூறினால் மூன்று வருடம் ஜெயிலும், ஜீவானாம்சமும் வழங்க வேண்டும் என்ற சட்டத்தை இயற்றி உள்ளனர்.
இந்த சட்டம் முழுமையாக நிறைவேற்றப்பட்டால் சிறை தண்டனைக்கும், ஜீவனாம்சத்திற்கும் பயந்து குர்ஆன் கூறும் முத்தலாக் சட்டத்தை ஒவ்வொரு தலாக்கிற்கும் இடையில் மூன்று மாத கால இடைவெளியை பின்பற்றுவதற்கு மக்கள் தயாராகுவார்கள் அந்த இடைவெளியில் அல்லாஹ் இணக்கத்தை ஏற்படுத்துவான் தலாக்குகள் குறைவதற்கு பெருமளவு வாய்ப்பு இருக்கும் இன்ஷா அல்லாஹ்.
இதற்கு பெயிலும் இல்லாத காரணத்தால் சிறையில் இருக்கும் மூன்று வருடகாலமும் அரசு அவனுடைய தலாக் விடப்பட்ட மனைவிக்கு ஜீசவனாம்சம் கொடுக்குமா ? அல்லது சிறையில் மாத சம்பளமாக வழங்குமா ?
என்ற கேள்விக்கு சட்டத்தை இயற்றிய மெத்தப் படித்த மேதாவிகள் (நீதிபதிகள்) பதில் சொல்ல வேண்டும் ?

அடுத்தது இவர்கள் முத்தலாக் தடை சட்டத்தை சரியாக இயற்றினார்களோ, தவறாக இயற்றினார்களோ ? ஆனால் முஸ்லிம்களின் திருமண சட்டத்தில் தலையிடுவதில்லை என்ற இந்திய அரசியல் சாஸன சட்டத்தை மீறி இந்த முத்தலாக் தடை சட்டத்தை இவர்கள் இயற்றியதற்கு எதிராக கடுமையான போராட்டத்தை முஸ்லிம்கள் நடத்த வேண்டும் ! இதற்கு முஸ்லீம்கள் தயாராக வேண்டும்.
இதையடுத்து மதஹ்பில் இருக்கும் ஒரே நேரத்தில் மூன்று முறை கூறும் முத்தலாக் சட்டத்தை தடை செய்வதற்கான அனைத்து வழிகளையும் கண்டறிந்து களையப்படுவதற்கு முயற்சிக்க வேண்டும்.
மனிதனின் வாழ்க்கைக்காக வழங்கப்பட்ட அல்லாஹ்வின் தனித்துவம் மிகுந்த சரியான சட்டம் மேலோங்க வேண்டும்.

சனி, டிசம்பர் 31, 2011

.

அல்லாஹ்வின் திருப்பெயரால்...


அடிமை விலங்குகளை உடைத்தெறிந்த அல்குர்ஆன்


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்;...



அலைக்கழிக்கப் பட்டப் பெண் இணம் ஓர் ஃப்ளாஷ் பேக்



பெண்களுக்கு ஆன்மா உண்டா ? இல்லையா ? அவ்வாறு உண்டெனில் அது ஆணுடைய ஆன்மா போல் இருக்குமா ? அல்லது மிருகங்களுடைய ஆன்மா போல் இருக்குமா ? என்று சோதனையிடச் சொன்னது இன்று நாகரீகத்தின் உச்சானிக் கொம்பில் வீற்றிருப்பதாக கூறிக் கொள்ளும் மேலை நாடுகள் ?

உயர்ந்த நாகரீகம் பேணப்பட்ட காலம் என்று வர்ணிக்கப்படுகிற சங்க காலத்திலும் கூட பெண்கள் கொத்தடிமைகள் போலவே பேணப்பட்டனர்.

கீழ்சாதி என்று முத்திரை குத்தப்பட்ட தலித் பெண்கள் ஆரியர்களுடைய பார்வையில் கூட படக்கூடாது அவ்வாறு பட்டால் அன்றைய தினம் அவன் தீட்டாகி விடுவான் என்று அவாள்களுடைய மனு தர்மத்தில் எழுதப் பட்டு;ள்ளது.

அவாள்களுடைய ஆத்துப் பெண்களும் கூட பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக் கூடாது என்றும் கணவனுடைய மரணத்திற்குப் பிறகு '' சதி ''  (உயிருடன் கொளுத்தப் பட )  செய்ய வேண்டும் என்றும் எழுதப் பட்டுள்ளதுடன் இன்றுவரை அது ( சதி ) நடைமுறையில் இருந்து வருகிறது.

அரேபிய தீபகற்பத்தில் பெண் குழந்தை பிறப்பதை இழிவாகவும்> கேவலமாகவும் கருதி வந்ததுடன் பச்சிளம் சிசுவை உயிருடன் புதைத்து புதை குழியின் மீது எறி நின்று வெறுப்பு தீரும் வரை மிதித்து தள்ளினர். அவர்களில் ஒருவனுக்கு பெண் குழந்தை பற்றி என்று நற்செய்தி கூறப்பட்டால் அவனது முகம் கறுத்து கவலைப் பட்டவனாகி விடுகிறான். 16:58, ... இழிவோடு இதை வைத்துக் கொள்வதா? அல்லது (உயிரோடு) மண்ணில் புதைத்து விடுவதா? (என்று எண்ணுகிறான்); கவனத்தில் கொள்க! அவர்கள் தீர்ப்பளிப்பது மிகவும் கெட்டது. . 16:59.

இது நாம் அங்கொன்றும்> இங்கொன்றுமாக எடுத்து கோடிட்டுக் காட்டி உள்ளோம் ஆண் வர்க்கத்தின் கோரப் பிடிகளில் பெண் இனம் சிக்கி அலைக்கழிக்கபட்ட வரலாறு நீண்ட நெடியதொரு வரலாறாகும்.

இப்படிப்பட்ட மோசமான ஒரு காலகட்டத்தில் தான் அவர்களை நோக்கி அல்குர்ஆன் கீழ்கானுமாறு பிரகடனப் படுத்திற்று

மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள் , அவரிலிருந்து அவரது துணையைப் (மனைவியை) படைத்தான், அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும் பெண்களையும் பெருகச் செய்தான்;. ... 4:1

பெண் இனம் உலகில் எவ்வாறு தோற்றுவிக்கப்பட்டது ? எதற்காக தோற்றுவிக்கப்பட்டது ? என்பதை பெண்ணினத்தை அலைக்கழித்த ஆண் வர்க்கத்தை நோக்கி அல்குர்ஆன் மேல்கானுமாறு கூறி தெளிவு படுத்தியது. அல்குர்ஆன் தெளிவு படுத்தியது போன்று குர்ஆனை மறுக்கக் கூடிய இறைமறுப்பாளர்;களுடைய ஆகமங்கள் எதுவும் தெளிவு படுத்த வில்லை அல்லது தெளிவுபடுத்தப்பட்டதை மறைத்தனர் என்பதுவே உண்மையாகும் அதனால் தான் இந்த ( பெண் ) ஆன்மா எந்த ஆன்மாவைச் சேர்ந்தது என்று பரிசோதிக்க உத்தரவிட்டனர். அவரிலிருந்து அவரது துணையைப் (மனைவியை) படைத்தான்> அது மனித ஆன்மா தான் வேறெந்த இனத்தையும் சார்ந்த ஆன்மாவல்ல என்று அல்குர்ஆன் பிரகடனப் படுத்தியப் பின் முதன் முதலில் அரேபயி தீபகற்பத்தில் பெண் சிசுக்கள் உயிருடன் புதைக்கப்படுவது ஒழித்துக் கட்டப்பட்டது. 

அதுமட்டுமல்லாமல் அன்றைய ரோம> பாரசீகங்களில் போர்களில் பிடிக்கப்படுகின்ற பெண்களுடைய தலை முடி சடைகளை வெட்டி எடுத்து கயிறுகளாக திரிக்கப்பட்டு சந்தைகளில் உயர்ந்த விலைக்கு விற்கப்பட்டதுடன் வரம்பு மீறி அவர்களை துஷ்பிரயோகம் செய்து தங்களது இச்சைக்கு பலவந்தப் படுத்தப்பட்டனர்.

நம்பிக்கை கொண்டவர்களே! பெண்களை வலுக்கட்டாயமா அடைவது உங்களுக்கு அனுமதி இல்லை. ... 4:19

என்றுக் கூறி பெண்களை பலவந்தப்படுத்தி இச்சைக்கு இணங்க வைத்ததை அல்குர்ஆன் தடைசெய்ததுடன்.

உங்களில் எவருக்குச் சுதந்திரமுள்ள முஃமினான பெண்களை விவாகம் செய்து கொள்ள சக்தியில்லையோ> அவர்கள் முஃமினான அடிமைப்பெண்களிலிருந்து உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்ட பெண்களை (மணமுடித்துக் கொள்ளலாம்;). அல்லாஹ் உங்கள் ஈமானை நன்கு அறிகிறவன். உங்களில் சிலர் சிலரைச் சேர்ந்தவர்கள்;. ஆகவே முஃமினான அடிமைப் பெண்களை அவர்களின் எஜமானர்களின் அனுமதி கொண்டு, மணமுடித்துக் கொள்ளுங்கள் - அவர்களுக்குரிய (மஹர்) தொகையை முறைப்படிக் கொடுத்து விடுங்கள்;. 4:25 .

என்று போரில் பிடிக்கப்படுகின்ற அடிமைப் பெண்களை அதிகார துஷ்பிரயோகம் செய்து வந்ததை தடுத்து அவர்களுடைய எஜமானர்களுடைய அனுமதிபெற்று திருமணம் செய்து அவர்களுக்கும் வாழ்க்கை வசதியை செய்து கொடுக்கச் சொன்னதுடன் அவர்களுக்கும் மற்றப் பெண்களுக்கு கொடுப்பதைப் போன்றே மஹர் தொகையையும் கொடுக்கச் சொல்லி அடிமை விலங்கை உடைத்தெறிந்து சமூக அந்தஸ்தை ஏற்படுத்தியது சங்கை மிருந்த திருக்குர்ஆன். 

அதுமட்டுமல்ல இந்த உலகம் முடியும் காலம் வரை பெண்களுக்கு இஸ்லாம் அமைத்துக் கொடுத்த பாதுகாப்பு வேலி போல் எந்த ஒரு சட்டமும் இன்றளவும் எவரிடத்தில் வேத ஆகமங்கள் இருப்பதாக கூறுகிறார்களோ அவர்களது எந்த வேத ஆகமத்திலும் குறிப்பிடப் படவில்லை.

ஒரு பெண் விபச்சாரம் போன்ற குற்றச் செயலில் ஈடுபட்டு விட்டதாக ஒருவர் கூறி விட்டால் ( அவர் செல்வாக்குள்ளவராக இருந்தால் ) போதும் அந்தப் பெண்ணைக் கொண்டு வந்து கரும்புள்ளி செம்புள்ளிக் குத்தி ஊர்வலம் விடப்படுவதை இன்றளவும் கிராமங்களில் கண்டு வருகிறோம்.

உங்கள் பெண்களில் எவளேனும் மானக்கேடான செயல் செய்துவிட்(டதாகக் குற்றம் சுமத்தப்பட்)டால், அதை நிரூபிக்க உங்களிலிருந்து நான்கு பேர்களை அழையுங்கள்;... 4:15.

வலுவான சாட்சியங்களை கொண்டு வரச் சொல்வதன் முக்கிய நோக்கம் தனது இச்சைக்கு இணங்க மறுக்கும் ஒரு அபலைப் பெண்ணை பழி வாங்குவதற்கு நடத்தைக் கெட்டவள் என்றுக் கூறி எளிதில் பழிவாங்கி விடலாம் அதனால் அல்குர்ஆன் சாட்சிகளை அதிகப்படுத்தி சதிகாரர்களின் சதி முயற்சிகளை முனை மழுங்கச் செய்தது.

பழசுக் கசந்து புதியதை தேடி கிளை விட்டு கிளை பாய நினைக்கும் ஆடவனுக்கு நீங்கள் ஒரு மனைவி(யை விலக்கி விட்டு அவளு)க்கு பதிலாக மற்றொரு மனைவியை (மணந்து கொள்ள) நாடினால் முந்தைய மனைவிக்கு ஒரு பொருட்குவியலையே கொடுத்திருந்த போதிலும் அதிலிருந்து எதையும் (திரும்ப) எடுத்துக் கொள்ளாதீர்கள்... 4:20

உப்பு சப்பில்லாத கரணத்தை கையில் பிடித்துக் கொண்டு தலாக் கொடுத்து விட்டு வேறு ஒரு புதுப் பெண்ணை மனமுடிக்க நினைப்பருக்கு முந்தைய அந்த மனைவிக்காக அதற்கு முன் எதை உருவாக்கிக் கொடுத்திருந்தாலும் அது என்ன விலையாக இருந்தாலும் அதைத் திரும்ப பெற முடியாதளவுக்கு சட்டம் வகுத்துக் கொடுத்து  பெண்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்தியது சங்கைக்குரிய திருக்குர்ஆன்.

திருமனம் செய்து கொடுத்து விட்டால் பெண்ணுக்குப் புகுந்த இடம் தான் கடைசிப் புகலிடம் அவளுக்கு அவனது கணவனுடைய சொத்துக்களே போதுமானதாகும் என்றுக் கூறி அவளை தாய், தந்தையருடைய சொத்துக்களிலிருந்து; பங்கு கொடுக்காமல் துரத்தி விட்டு விடுவார்கள் தந்தை பெரிய நிலச்சுவான்தாராக இருந்தாலும் இந்த நிலை தான் நீடித்தது.

பெற்றோரோ> நெருங்கிய உறவினர்களோ விட்டுச் சென்ற (சொத்)தில் ஆண்களுக்கு பாகமுண்டு. அவ்வாறே பெற்றோரோ> நெருங்கிய உறவினரோ விட்டுச் சென்ற (சொத்)தில் பெண்களுக்கும் பாகமுண்டு - (அதிலிருந்துள்ள சொத்து) குறைவாக இருந்தாலும் சரி, அதிகமாக இருந்தாலும் சரியே (இது அல்லாஹ்வினால்) விதிக்கப்பட்ட பாகமாகும். 4:7      என்றுக் கூறி பெண்களுக்கு தன்னை ஈன்றெடுத்த தனது தாய்> தந்தையருடைய சொத்துக்களில் பங்கு பெறச்செய்து அதற்கு முன்பு அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை உடைத்தெறிந்து ஒருவர் பெற்றெடுத்தப் பிள்ளைகளுக்கு மத்தியில் ஆணாக இருந்தாலும்> பெண்ணாக இருந்தாலும் அவர்களுக்குள் சமநிலையை ஏற்படுத்தியது கண்ணியமிக்க அல்குர்ஆன்.

திருக்குர்ஆன் இறக்கியருளப் படுவதற்கு முன்பு பெண்னிணத்திற்கு இழைக்கப்பட்ட அனைத்து அநீதிகளையும் அல்குர்ஆன் இறங்கிய அரேபிய தீபகற்பத்தில் நடைமுறைப் படுத்தி ஒழித்துக்கட்டியதுடன் இஸ்லாம் அரேபயிய தீபகற்பத்தையடுத்து உலகை கோலோச்சி வந்த ரோம> பாரசீகத்தை அடைந்து அங்கு சிறுமைப் படுத்தப் பட்டிருந்த பெண்ணினத்தின் அடிமை விலங்குகளையும் உடைத்தெறிந்தது> அதற்கடுத்து ஐரோப்பா> இந்தியா போன்ற நாடுகளுக்கும் இஸ்லாம் பரவிச் சென்று அங்கு சிறுமைப் படுத்தப் பட்டிருந்த பெண்ணினத்தின் அடிமை விலங்குகளையும் உடைத்தெறிந்தது.

இன்று உலகம் முழுவதிலுமுள்ள பெண்கள் ஆண்களுக்கு நிகராக ஆண்வர்க்கததினரால் ஆதிக்கம் செலுத்த முடியாமல் சமநிலை வாழ்வு வாழ்வதற்கு அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான். அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்;. பின்னர் இவ்விருவரிலிருந்து> அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்;. ... 4:1 என்ற குர்ஆனின் பிரகடனமே முக்கியக் காரணமாக அமைந்;ததென்றால் எனதருமைய சகோதரிகளே ! குர்ஆனை இந்தப் புனித ரமளான் மாதத்தில் ஓதுங்கள் ஓதியதுடன் அது கூறும் ஏவல் - விலக்கல்களை முறையாகப் பேணி வாழ முயற்சி செய்யுங்கள் இது உங்களுக்கு ரமளானுக்குப் பிறகும் பின் தொடர ஏதுவாக அமைந்து விடும்.

இறுதியாக ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் பெண்ணை விட ஆண் இனம் உயர்வாக கருதப்படுகிறது   (ஆண்> பெண் இருபாலாரில்) அல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். (ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண் பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினாலும், ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். . . 4:34     

ஆண்கள் பெண்களுக்கு பொருளீட்டிக் கொடுத்து அவர்களுடைய தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பதால் பெண்ணை விட ஆணை சற்று உயர்த்திக் கூறப்படுகிறது. 
 


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... அன்புடன் அதிரை ஏ.எம்.ஃபாரூக்

திங்கள், அக்டோபர் 24, 2011

.



விட்டில் பூச்சிகளாய் வீட்டு பணிப் பெண்கள்.

சமீபத்தில் ஒரு இளம்பெண் நைட்டியுடன் சிங்கப்பூரிலிருந்து சென்னை வந்திறங்கியதைக் கண்டு விமான நிலையத்தில் இருந்த பிறப் பயணிகள் அவரை சூழ்ந்து கொண்டனர். விமான நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்து அப்பெண்ணை அணுகி விசாரித்ததில் அதிர்ச்;சி அடைந்தனர். 

அப்பெண்ணின் பெயர் ரேவதி என்றும் வயது 25 சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி மருதன்கோன் கிராமம் என்றும் கடந்த மூன்று வருடங்களுக்கு முன் சிங்கப்பூருக்கு பணிப்பெண்;ணாக சென்றுத் திரும்பி இருப்பதை அவரது கையில் இருந்த பாஸ்போட்டின் மூலம் போலீஸார் தகவல் தெரிந்து கொண்டனர்.

மூன்று வருடங்கள் கழிந்து தாயகத்திற்கு திரும்பிய அந்தப் பெண்ணின் கையிலிருந்த பாஸ்போர்ட்டைத் தவிற வேறெதுவும் இல்லை.  

அங்கு அப்பெண்ணுக்கு என்ன நடந்தது என்று சொல்ல முடியாத அளவுக்கு புத்தி பேதலித்து உள்ளார் அதனால் போலீஸார் கேட்ட எந்தக் கேள்விக்கும் சரியாக பதிலளிக்க முடியாமல் முன்னுக்குப் பின் முரனாகப் பேசி உள்ளார்.

வளைகுடாவிலிருந்தும், சிங்கப்பூரிலிருந்தும் வந்த ஏராளமானப் பயணிகள் தாங்கள் வேலை செய்யும் நாடுகளில் வீட்டுப்பணிப்பெண்களுக்கு நேரும் அவலங்களை பேசிக்கொண்டு அது மாதிரி இந்தப் பெண்ணுக்கும் எதாவது நேர்ந்து இருக்கலாம் அதனால் மனநிலை பாதித்திருக்கலாம் என்று பேசிக் கொண்டிருந்திருக்கின்றனர்.

அப்பெண்ணின் நிலையை அறிந்த போலீஸார் அப்பெண்ணின் பாஸ்போட்டிலிருந்த முகவரிக்கு தகவல் கொடுக்கபட்டதும் விரைந்து வந்த அப்பெண்ணின் பெற்றோர்கள் தங்கள் மகளின் கோலத்தைக் கண்டு கட்டி அனைத்து அழுது வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளனர்.
இதில் சிந்திக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் ?

சிங்கப்பூர், மலேசியா மற்றும் வளைகுடா நாடுகளுக்கு வீட்டு வேலைக்கு செல்லும் பெண்களை அதிகமாக வேலை வாங்குவதாகவும், முறையான சம்பளம் தர மறுப்பதாகவும், சிறுவயதுடைய பெண்களை பாலியல் தொந்தரவுகளுக்கு உட்படுத்தப் படுவதாகவும் மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு  கடந்த 2007ல் இந்தியாவிலிருந்து வீட்டு வேலைக்காக பெண்களை தேர்வு செய்யும் வெளிநாட்டவர்களுக்கு மத்திய அரசு ஏராளமான கட்டுப்பாடுகளை விதித்து சவுதி அரோபியா, ஐக்கிய அரப் எமிரேட்ஸ், பஹ்ரைன், கத்தார், ஓமன், குவைத், லிபியா, ஜோர்தான், சூடான், ஏமன், சிரியா, லெபனான், புருனே, ஆப்கானிஸ்தான், இந்தோனேஸியா, மலேசியா, ஆகிய 18 நாடுகளில் இயங்கும் இந்திய தூதரங்கங்களுக்கு தகவல் அனுப்பப்பட்டது.

மேற்காணும் 18 நாடுகளில் யாருக்கு இந்தியாவிலிருந்து வீட்டு பணிப்பெண்; தேவைப்படுகிறதோ அவர் விசா பெற்றதும் அந்த நாட்டில் இயங்கும் இந்திய தூதரகத்தில் சென்று அந்த பணிப் பெண்ணிற்காக 2500 டாலர் காப்புத் தொகை செலுத்தி 400 யு.எஸ். டாலர் சம்பளம் தருவதாக ஒப்பந்தம் செய்து கொண்டு, 30 வயதை கடந்த பெண்ணை தேர்வு செய்து கொள்ள வேண்டும்;, அப்பெண் வந்த உடன் மொபைல் போன் கொடுத்து நம்பரை இந்திய தூதரகத்திடம் கொடுக்க வேண்டும், அப்பெண்ணுக்கு உடல் ரீதியாக அல்லது மன ரீதியாக எதாவது தொந்தரவு கொடுத்தால் அப்பெண் உடனடியாக தூதரக அதிகாரியை தொடர்புகொண்டு புகார் செய்ய வேண்டும், புகாரின் அடிப்படையில் இந்தியதூதரக அதிகாரியால் விசாரிக்கப்பட்டு அந்த நாட்டின் லேபர் கோர்ட் மூலம் நடிவடிக்கை எடுக்கப்படுவார் என்றும் இன்னும் ஏராளமான கட்டுப்பாடுகள் அடங்கிய ஒப்பந்தப் படிவத்தில் கையெழுத்திட்டப் பின்னரே இந்தியாவிலிருந்து வீட்டு பணிப்பெண் கொண்டு வரமுடியும் என்ற சட்டம் நவம்பர் 2007 முதல் தேதியிலிருந்து அமலில் உள்ளது.

அமலில் இருந்து என்ன செய்வது ? வீட்டு துப்புரவுப் பணிக்காக வெளிநாடுகளுக்கு வரும் பெண்கள் நூற்றுக்கு நூறு சதவிகிதம் அடிப்படை கல்விக் கூட கற்காதவர்கள் என்பதால் மேற்காணும் சட்ட திட்டங்கள் எதுவும் அவர்களுக்குத் தெரிவதில்லை, ஆனால் இது பத்திரிகையில் செய்தியாக வெளி வந்ததை நன்கு அறிந்துள்ள ஏஜெண்டுகள் பணத்திற்காக இந்த அப்பாவிப் பெண்களை பலிகடா ஆக்குகின்றனர்.

வீட்டு பணிப் பெண்களுக்கான பாதுகாப்பு சட்டத்தை இயற்றி 18 நாடுகளின் இந்திய தூதரகங்களுக்கு தகவல் அனுப்பிய மத்திய அரசு இந்திய நாட்டின் விமான நிலையங்களின் குடியேற்ற அதிகாரிகளுக்கு அனுப்பி நடைமுறைப் படுத்த உத்தவு பிறப்பிக்க வில்லை அதனால் பாஸ்போட்டில் விசா, குடியுரிமைப் போன்றவைகளை சோதனை செய்யும் விமான நிலைய குடியேற்ற அதிகாரிகள் வீட்டு வேலைக்காக செல்லும் பணிப் பெண்களுக்காக மேற்காணும் 2500 டாலர் காப்புத்தொகை செலுத்தப்பட்டிருக்கிறதா ? மேற்காணும் புதிய சட்டத்தின் படி இந்தியத் தூதரகத்தில் ஒப்பந்தப் படிவத்தில் கையெழுத்திடப் பட்;டுள்ளதா ? என்பதை ஆய்வு செய்வதில்லை.

அதனால் வீட்டு பணிப்பெண்களுக்கான பாதுகாப்பு சட்டம் இயற்றப்டுவதற்கு முன் இருந்த அவல நிலையே இதுவரை நீடிக்கிறது.


படிப்பறிவில்லாத அப்பாவிப் பெண்கள் இதுதான் நம் தலை எழுத்து என்று நினைத்து எஜமானிகள் கொடுக்கும் வேலை சம்மந்தமான தொந்தரவுகளை உடல் ரீதியாக தாங்கிக் கொள்கின்றனர், சில சேடிஷ்டு எஜமானர்கள் கொடுக்கும் பாலியல் தொந்தரவுகளை மன ரீதியாக சகித்துக் கொள்கின்றனர். ஒரு அளவு தான் மன ரீதியாக சகித்துக் கொள்ளவும், உடல் ரீதியாக தாங்கிக் கொள்ளவும் முடியும் வரம்பைக்கடந்து விடும் பொழுது மனநிலையில் பாதிப்பு ஏற்படுகிறது.

இதில் இன்னும் கொடுமை என்ன வென்றால் ? சிலர் தங்களுடைய வீட்டிற்காக பணிப்பென் விசா அப்ளை செய்வதுடன், சேர்த்தே வாகன ஓட்டுனர் விசாவும் அப்ளை செய்வார்கள் அது இரண்டும் கிடைத்ததும் ஏஜண்டுகளிடம் கொடுத்து கணவன் மனைவியாக கேட்கின்றனர். 

யாரும் தங்களுடைய பிள்ளைகளை எவரிடமும் விட்டு விட்டு இவ்வாறு கணவன் மனைவியாக வெளிநாடு செல்வதில்லை விசா கொடுப்போர் இதை நல்ல நோக்கத்தடன் செய்தாலும் இந்த நல்ல நோக்கம் நடைமுறை சாத்தியமற்றது.

ஏஜென்டுகள் தங்கள் கையில் கிடைத்த எந்த விசாவையும் ஸ்டாம்பிங்க் பண்ண முடியவில்லை என்றுக் கூறி திருப்பி கொடுக்க மாட்டார்கள் போலி சான்றிதழ் தயார் செய்து என்ன மாதிரியான கேட்டகிரி விசாவையும் ஸ்டாம்பிங்க் பண்ணி விடுவார்கள். அதைப் போலவே போலி திருமண சான்றிதழ் தயார் செய்து கணவன் மனைவி அல்லாத வௌ;வேறு ஆண், பெண்களை கணவன், மனைவியாக அனுப்பி விடுகின்றனர்.

விசையில் சிக்கிக் கொண்ட எலியைப் போல் வாகன ஓட்டுனரின் கிடுக்கிப் பிடியில் சிக்கிக் கொள்ளும் இந்தப் பெண்கள் அவராலும், பிறராலும் படும் பாலியல் அவஸ்தைகளை சொல்லி மாளாது. இதுப்போன்ற அப்பாவிப் பெண்களே ரேவதி போன்ற மனநிலை பாதிப்புக்கு உள்ளாகின்றார்கள்.

இத்தனை சித்ரவதைகளை அனுபவித்துக் கொண்டு இந்த சிறிய சம்பளத்திற்காக இந்தப் பெண்கள் இளம் வயதில் வெளிநாட்டு மோகத்தில் விளக்கின் மீது விழும் விட்டில் பூச்சிகளாய் ஆக வேண்டுமா

தங்கள் மகளை வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்பும் பெற்றோர்களே சிந்தியுங்கள், தங்கள் சகோதிரியை வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்பும் சகோதரர்களே சிந்தியுங்கள், தன் மனைவியை வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்பும் கணவன் மார்களே சிந்தியுங்கள், இதையும் மீறி வேறு வழியில்லாத நிலையில் வெளிநாட்டிற்கு வந்து சிக்கிக்கொள்ளும் அபலைப் பெண்களின் அவலநிலையை அறிந்தால் சமுதாய சிந்தனை கொண்ட சகோதரர்கள் உடனே அங்கு இயங்கும் இந்திய தூதரகத்திற்கு தகவல் கொடுத்து அப்பெண்களை காப்பாற்ற முயற்சி செய்யுங்கள்.

அவ்வாறு செய்தால் ரேவதிப் போன்று மனநிலை பாதிக்கப்படுவதற்கு முன் காப்பாற்றி விடலாம்.


 உணர்வுக்கு எழுதிய கட்டுரை





وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

.


பூவரசிக்கு ஆயுள் தண்டனை !?
 
பூவரசிக்கு ஆயுள் தண்டனை அளித்து நீதியை நிலை நாட்டி விட்டது இந்திய நீதித் துறை. அவரும் ஆயுள் தண்டனையை முகம் சுளிக்காமல் ஏற்றுக்கொண்டு விட்டார். மனசாட்சிக்குத் திரையிட்டு சிறுவன் ஆதித்யாவை கொடூரமான முறையில் கொலை செய்தக்காரணத்தால் ஆதித்யாவின் பெற்றோரை விட பொதுமக்கள் பூவரசியின் மீது கோபத்தால் கொந்தளித்துள்ளதாலும், ஆதித்யாவின் தந்தை ஜெயக்குமாரிடம் காதல் என்றப்பெயரால் ஏமாறுவதற்கு முன் புதுச்சேரியில் வேறு ஒருவனிடம் இதே காதல் என்றப் பெயரால் உடலைக் கொடுத்து மானத்தை இழந்ததை அறிந்த அவரதுப் பெற்றோர் அவரை வீட்டிலிருந்து வெளியேற்றி விட்டக் காரணத்தாலும் வெளியில் வேறுப் புகலிடம் இல்லாத பூவரசி இப்போதைக்கு சிறைக் கூடமே சிறந்த பாதுகாப்பு என்பதை கருத்தில்கொண்டு ஆயுள் தண்டனைத் தீர்ப்பை வருத்தமின்றி ஏற்றுக்கொண்டு ஆயுள் கைதிகளுக்கான சீருடையை அணிந்துகொண்டு சிறை வாழ்க்கையைத் தொடங்கி விட்டார்.

ஏறத்தாழ பூவரசியின் வாழ்க்கை அஸ்த்தமனத்தை நோக்கி நகரத் தொடங்கி விட்டது, சிறுவன் ஆதித்யாவின் கதை அப்பொழுதே முடிந்து விட்டது. ஆனால் இதற்கெல்லாம் மூல காரணகர்த்தாவாகத் திகழ்ந்த காமுகன் ஜெயக்குமார் தனது மனைவியுடன் சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் (இன்னும் பிறப் பெண்களுடனும் காதலிப்பதாக பொய் கூறி ஏமாற்றி அனுபவித்துக் கொண்டுமிருக்கலாம் ? )

பூவரசி ஒரு எம்.எஸ்.சி. பட்டதாரி சிப்காட்டில் ஒரு தனியார் நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் பணி புரிந்தவர் கொலை செய்வது, கொள்ளை அடிப்பது அவரது முந்தைய வாடிக்கையாக இருக்கவில்லை அந்தப் பழக்கத்தில் ஆதித்யாவை அவர் கொலை செய்யவுமில்லை. முதல் காதலில் ஏமாற்றப்பட்டுப் பெற்றோரால் விரட்டியடிக்கப்பட்டதும் சென்னை வந்து வேலைத் தேடிய பூவரசிக்கு தான் வேலை செய்யும் கம்பெனியில் 50 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் சேர்த்து விடுவதாகக் கூறி காதல் வலையில் வீழ்த்தி உள்ளார் ஏற்கனவே திருமணமாகி குழந்தை குட்டிகளுடன் உள்ள ஜெயக்குமார்.
ஜெயக்குமார் திருமாணமான தகவலறிந்தப் பின் எனக்கும் மனைவி என்ற அந்தஸ்தை வழங்கி வாழ வையுங்கள் என்றுக் கெஞ்சிக் கேட்டப்பின்பும் அதற்கு மறுத்து என் வயிற்றில் வளர்ந்த அவரின் கருவை அவரே இறக்கமின்றி இரண்டு முறை கலைக்கச்சொல்லி கட்டாயப்படுத்தியது தான் அவருடைய வளர்ந்தக் கருவாகிய ஆதித்யாவை இறக்கமின்றி கொலை செய்வதற்கு என்னைத் தூண்டியது என்று அவரை விசாரித்தப் போலீஸாரிடம் வாக்குமூலம் கொடுத்ததுடன் அதை நீதிமன்றத்திலும் கூறினார் ஜெயக்குமாரும் அதை மறுக்கவில்லை (எத்தனை தான் ஏமாற்றப்பட்டாலும் அதற்காக பழி தீர்க்க பச்சை சிசுவை கொலை செய்ததை ஏற்றுக் கொள்ள முடியாது என்றாலும); இதற்கு காரணமாக இருந்த ஜெயக்குமாருக்கு எந்த தண்டனையுமில்லை என்பது தான் வருத்தமளிக்கிறது.

இதில் இன்னும் வேதனை அளிக்கக்கூடிய விஷயம் என்னவென்றால் பூவரசிக்கு ஆயுள் தண்டனை என்று தீர்ப்பளிக்கப்பட்ட நாள் பிப்ரவரி 15, இந்தியப் பெண்கள் தங்கள் மானத்தை காதல் என்றப் பெயரால் கடைவிரிக்க அனுமதிக்கப்பட்ட நாள் (காதலர் தினம்) பிப்ரவரி 14.

மேல்படித் தீர்ப்பை குறைந்தபட்சம் பிப்ரவரி 14க்கு ஒரு வாரம் முன்பு அளித்துவிட்டு ஆதித்யாவின் கொலையும், பூவரசியின் ஆயுள்தண்டனையும் காதல் என்றப்பெயரில் நடந்த மோசடியின் பின்விளைவுகள் தான் என்று நீதிபதி தனது தரப்பிலிருந்து ஒரு அறிக்கையை சேர்த்து வாசித்துவிட்டு காதல் என்றப் பெயரால் ஏமாறும் பெண்களே உஷாராகிக் கொள்ளுங்கள் என்றுக்கூறி இருந்தால் ஓரளவாவது பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கும் ஆனால் கேடுகெட்ட காதலர் தினமாகிய 14ஐ கடத்தி விட்டு 15ல் இந்தத் தீர்ப்பை வழங்கியதன் மூலம் காதல் எனும் பெயரால் அப்பாவிப் பெண்களை சீரழிப்பதற்கு ஆண்களை அரசே ஊக்குவிப்பதாக தோன்றுகிறது.

காதல் என்ற வழிகேட்டால் 99 சதவிகிதம் பெண்கள் பாதிக்கின்றனர், ஏமாற்றப்பட்டப் பல பெண்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர், தன் மகள் காதல் என்றப் பெயரால் கற்பிழந்த செய்தி அறிந்து பல தாய் - தந்தையர் ஹார்ட்அட்டாக் ஏற்பட்டு அகால மரணத்தைத் தழுவி இருக்கின்றனர், பல தாய் - தந்தையர் கோமாவில் வீழ்ந்துள்ளனர்.

சமுதாயத்தில் மிகப்பெரிய சீரழிவையும், தலை குணிவையும் ஏற்படுத்தும் காதல் என்ற சீர்கேட்டை  ஒருப்புறம் அரசு அனுமதித்துக் கொண்டு மறுப் புறம் அதில் ஏமாற்றப்படும் பெண்களுக்கு விசாரித்து நீதி வழங்குவதில்லை. 

ஆண்களிடம் ஏமாந்து விடாதீர்கள் உங்கள் கற்பை நீங்கள் தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று கடந்த நவம்பர் 15 அன்று டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி கைலாஷ் காம்பீர் பெண்களுக்கு உபதேசம் செய்திருந்தார். ஆனால் காதல் என்றப்பெயரால் அப்பாவிப் பெண்களின் கற்பை சூறையாடும் ஆண்களை மருத்துவப் பரிசோதனைக்குட்படுத்தி உறுதி செய்து கொண்டு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று எச்சரிக்கை செய்ய வில்லை.

மானக்கேடான செயல்களில் ஈடுபடும் இரு பாலரையும் தண்டியுங்கள் என்றுக் கூறி ஆண்-பெண் இரு பாலரையம் சமன் படுத்தியது இஸ்லாம். உங்களில் வெட்கக்கேடானதைச் செய்த அவ்விருவரையும் கஷ்டப்படுத்துங்கள்!...4:16

ஹிந்து வேதங்களில் கூறப்பட்ட பெண்ணடிமைத்தனம் இன்று வரை ஒழிக்கப்படவில்லை என்பதற்கு மேற்காணும் நிகழ்வுகள் சான்றுப் பகிர்கின்றன. 


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

சனி, அக்டோபர் 15, 2011

.

وَقُل لِّلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ َ 31

தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். 24:31.



இழக்கும் கண்ணியம்


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

பென் சுதந்திரம் பேசுவோர்; பெண்களுக்கான சுதந்திரம் எதுவென்று தெரிந்திருந்தும் அதை இஸ்லாம் பேணச் சொல்லி வற்புருத்துவதால் அதை சட்டமாக்கி ஒழுங்குப் படுத்தி வருவதால் இஸ்லாமிய எதிர்ப்பைக் காட்டுவதற்காக மனமுரண்டுடன் இஸ்லாமியச் சட்டம் பெண்களின் உரிமைகளைப் பறிக்கிறது பர்தாவுக்குள் முடக்கி மூளையில் போட்டு விடுகிறது அதனால் அவர்கள் வெளி உலகம் தெரியாத அப்பாவிகளாக்கப் பட்டு வருகிறார்கள். கல்வி கற்க முடிவதில்லை> வேலைக்குச்சென்று பொருளீட்ட முடிவதில்லை என்றுக் கூக்குரலிடுவதுடன் சில முஸ்லிம் பெயர் தாங்கிகளைக் கொண்டும் இதேக் கருத்தை அலற விடுவார்கள் .

பாருங்கள் பர்தா சட்டத்தை முஸ்லிம்களே எதிர்க்கின்றார்கள்; இந்தக் கால முஸ்லிம்களுக்கு விருப்பமில்லாத ஒன்றை பழமைவாத முஸ்லீம்கள் அவர்கள் மீது வலுக்கட்டாயமாக திணிக்கின்றார்கள் என்று அவர்களது ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக்கி சலிப்புத் தட்டும் வரை பிரசுரிப்பார்கள்.

ஆணுக்கு நிகராக கல்வி கற்று> ஆணுக்கு நிகராக பொருளீட்ட வேண்டும்; என்று ஆர்வத்துடன் புறப்பட்ட அதிகபட்ச பெண்கள் கல்வி கற்கும் போது ஆசிரியர்களாலும்> சக மாணவர்களாலும் சீரழிக்கப் படுவதையும்> அதற்கடுத்து பொருளீட்டச் செல்லுமிடங்களில் நிர்வாக மேலாளராலும்> சக ஊழியர்களாலும் சீரழிக்கப்படுவதை வல்ல இறைவன் மேல்படி ஊடகக் காரர்களைக் கொண்டே சில நேரங்களில் தோலுரித்துக் காட்ட வைத்து விடுவான்.

  • உலகம் முடியும் காலம்வரை இஸ்லாமிய சட்டம் நடைமுறைப் படுத்த சாத்தியமானதே !
  • அது ஏகஇறைவனின் சட்டமாகும் !
  • அதற்கு மாற்றமான சட்டமே நடைமுறைப்படுத்த சாத்தியமற்றது !

என்பதை பர்தா சட்டத்தை மீறும் பெண்களுடைய அவலநிலையை இன்று உலக ஊடகங்கள் படம் பிடித்துக் காட்டுகின்றன.

வேலைக்கு அனுப்பப் படுவதால்...
தான் மட்டும் ரசிக்க வேண்டிய அழகும் வனப்பும் வாய்ந்த இளமைப் பருவ மனைவியை வேலைக்கு அனுப்பப்படுவதால் பிறர் ரசிக்கவும் மறைமுக அனுமதி வழங்கி விடுகின்றார்கள்.

வேலைக்குச் செல்லும் பெண்கள் தாங்கள் பணிபுரியும் கம்பெனி மேலாளர்> மற்றும் சக ஊழிர்கள் தங்களுடைய வீட்டிற்கு வரவும்> அவர்களது வீட்டிற்கு இவர்கள் செல்லவும்> வெளியில் பார்ட்டி> பீச் என்று சுற்றித் திரிவதையும் கணவன் மார்களால்> அல்லது தாய்-தந்தையரால் தடுக்க முடிவதில்ல.  காரணம் அவர்களிடம் கைநிறைய சம்பளமும்> வெளி உலக அனுபவமும் இருப்பதால் தடுத்தால் தடையை உடைத்து தனி வாழ்க்கை அமைத்துக் கொள்வார்கள்.

மேல்படி நிர்வாக மேலாளர் மற்றும் சக ஊழியர்களால் அவர்கள் பாலியல் உறவுக்கு உட்படுத்தப் படுகின்றனர் மிக குறைந்தபட்ச பெண்கள் மட்டுமே அதிலிருந்து விதிவிலக்காக தங்களை தடுத்துக் கொள்கின்றனர் அதிகபட்ச பெண்கள் உத்தியோக உயர்வுக்காகவும் இன்ன பிற தேவைகளுக்காகவும் தங்களை தாமே முன்வந்து அர்ப்பணித்து விடுகின்றனர்.

தங்களை தாமே முன்வந்து அர்ப்பணித்து விடுவதற்கு காரணம் அவர்களில் அதிகமானோர் தங்களது கல்லூரி வாழ்க்கையிலேயே ஆசிரியர்களாலும்> சக மாணவர்களாலும் பாலியலுக்கு உட்படுத்தப்பட்டு பெண்களுடைய இயற்கையான கூச்சத்தை தெளியவைத்து சகஜ நிலைக்கு கொண்டு வந்து விடுகின்றனர்.

பருவ வயதை கடந்தவர்கள் கல்லூரிகளில் முதுநிலை கல்வி பயிலும் காலங்களில் முறையற்ற பாலியல் உறவில் ஈடுபட்டவர்கள் அதிகமான சதவிகிதத்தினர் என்று சர்வதேச பாலியல் அமைப்பினர் டெல்லியில் நடத்திய ஏழாவது மாநாட்டில் புள்ளி விபரங்களுடன் சமர்ப்பி;க்கின்றனர். அதில் சென்னையைச் சேர்ந்த பாலியல் மருத்துவர் நாராணரெட்டி சென்னை நகர மாணவ- மாணவியரிடத்தில் திருமனத்திற்கு முன் தாம்பத்திய உறவில் ஈடுபட்டவர்களுடைய தகவல் அறிய 9000 மாணவ மாணவிகளுக்கு கருத்தாய்வு படிவம் அனுப்பப் பட்டதாகவும் அதில் 11 சதவிகிதம் பேர் பதில் அனுப்பினர் என்றும் அதில் மாணவர்களில் 52 சதவிகிதத்தினரும்> மாணவிகளில் 60 சதவிகிதத்தினரும் திருமனத்திற்கு முன்பு தாம்பத்தியத்தில் ஈடுபட்டு விட்டதாக மேல்படி தகவலை புள்ளி விபரத்துடன் மாநாட்டில் சமர்ப்பித்தார். ஆதார நூல் : சினிமா ஒரு தீமையா ?

இவ்வாறு அதிகபட்ச பெண்கள் கல்லூரி வாழ்க்கையிலேயே அழிந்து விடுவதால் அதற்கடுத்து வேலைக்குச் செல்லும் போது தாராளமாக தங்களை தாரை வார்க்கத் தொடங்குகின்றனர். கால சூழ்நிலையை கருத்தில் கொண்டு கணவன் மார்கள் தங்கள் மனைவியை வேலைக்கு அனுப்புவதை தடுத்துக் கொள்ள வேண்டும். உங்கள் மனைவியருக்கு உங்கள் மீது சில உரிமை என்னவெனில்> அவர்கள் உங்களுக்கு விருப்பமில்லாத ஒருவரை உங்கள் விரிப்பை மிதிக்க விடக்கூடாது. மேலும்> உங்களுக்கு விருப்பமில்லாத ஒருவரை உங்கள் வீட்டினுள் வர அனுமதிக்கக்கூடாது. ... (திர்மிதி)

சில இஸ்லாமிய நாடுகளிலும்...
பெண் சுதந்திரம் பேசப்பட்டு பெண்களை தொழில்நுட்ப கல்வி கற்க வைத்து ஆணுக்கு நிகராக வேலைக்கு அனுப்பிய சீன கலாச்சாரத்தால் வார்த்தெடுக்கப்பட்ட மலேசிய முஸ்லிம்களும் அதை பின்பற்றினர். ஆனால் இன்று கைகளைப் பிசைந்து கொண்டு '' உன்னால் நான் கெட்டேன் '' என்று நிற்கின்றனர்.

மலேஷியாவில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் பிரச்சனைகளுக்கு அவர்களது உடையலங்காரமே காரணம் என்றுக் கூறி ஆண் ஊழியர்களுடைய பாலுணர்வை தூண்டக் கூடிய வகையில் அங்க அவயங்கள் வெளியில் தெரியும் விதம் உடை அணிந்து வேலைக்கு வரக்கூடாது என்று சட்டமியற்றினர் அதிலும் பாலியல் குற்றச்சாட்டுகள் குறைந்ததாக தெரியவில்லை.

அதற்கடுத்து தங்களது முக அழகை மெருகேற்றக் கூடிய மேக்கப் வகையறாக்களை இட்டுக் கொண்டு வேலைக்கு வரக் கூடாது என்று சட்டமி;யற்றி இருக்கின்றனர்.
  • சக ஆண் ஊழியர்களுக்கு மத்தியில் பெண்கள் தங்களுக்கே உரித்தான புன்முறுவலுடன் வளைந்து> நெளிந்து பேசக்கூடாது> என்று சட்டமியற்ற முடியுமா ? முடியாது !
  • தனி அறையில் இருக்கும் மேலாளர் கோப்புகளை எடுத்துக்கொண்டு அறைக்கு வர உத்தரவிட்டால் பெண் செகரட்டரிகள் தனித்து செல்லக் கூடாது என்று சட்டமியற்ற முடியுமா ? முடியாது !
  • நிர்வாகத்தில் ஒன்றாகப் பணிபுரியும் ஆண்-பெண் ஊழியர்கள் பணி நேரம் முடிந்தப்பின் பார்க்> பீச் என்று சுற்றித் திரியக்கூடாது என்று சட்டமியற்ற முடியுமா ? முடியாது !

இவைகளும் ஆண் ஊழியர்களுக்கு பாலுணர்வைத் தூண்டக்கூடிய செயல்பாடுகளாகும். ஆண்-பெண் இணைந்து பணிபுரியும் இடங்களில் நிகழும் பாலியல் சேட்டைகளை மேல்படி சட்டங்களால் மட்டும் கட்டுப்படுத்திட முடியாது !

பெண்கள் வேலைக்கு வரவேண்டாம் என்ற சட்டம் இயற்றாதவரை அரசு அலுவலகங்கள்> தனியார் கம்பெனிகள்> தொழிற்சாலைகளில் நடக்கும் மேல்படி முறையற்ற பாலியல் குற்றங்களை தடுக்கவே முடியாது.

இதற்கு தீர்வு தான் என்ன ?
  • பெண் குடும்பத்தை நிர்வகிக்க வேண்டும்.
  • குடும்பத்தை நிர்வகிக்க ஆண் பொருளீட்ட வேண்;டும். இதுதான் தீர்வு !

இஸ்லாத்திற்கு முந்தைய வேதக்காரர்கள் பெண்கள் விஷயத்தில் ஏற்றத் தாழ்வு கற்பித்த போது பெண்களும் ஆண்களைப் போன்றவர்களே என்றுக் கூறி சமன்படுத்திய இஸ்லாம் ஆண்கள் பெண்களை நிர்வாகிப்பதால் பெண்களை விட ஆண்கள் இந்த விஷயத்திற்காக சற்று உயர்வாக கருதப்படுகிறார்கள்  என்றுக் கூறி ஆண்களை உழைத்து குடும்பத்தை கட்டிக் காக்க உற்சாகமூட்டியது. ...உங்கள் மீது அவர்(பெண்)களுக்கிருக்கும் உரிமை அவர்களுக்கு நீங்கள் சரிவர உணவும்> உடையும் அளிப்பதாகும். (திர்மிதி)

கட்டுக்கோப்பான குடும்பத்தை கட்டமைக்க...
ஒழுக்கமிக்க உறுப்பினர்களைக் கொண்ட கண்ணியமிக்க கட்டுக்கோப்பான குடும்பம் அமைவதற்கு பெண்கள் வீட்டில் தங்கி இருப்பது இன்றியமையாததாகும்.

சுமந்து பெற்று பாலூட்டுவதிலிருந்து நடக்கும் பருவத்தில் கல்வியை கொடுத்து உரிய வயதில் ஒழுக்கத்தை ஊட்டி வளர்ப்பது வரை அன்னை தந்தையில் அன்னையே முன்னிலை வகிக்கிறார் எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே பின் நல்லவராவதும்> தீயவராவதும் அன்னை வளர்க்கையிலே ... 

அறிவையும்> ஒழுக்கத்தையும் ஊட்டி வளர்க்க வேண்டிய அன்னை வீட்டை விட்டு வெளியேறி வேலைக்குச் சென்றுவிடுவதால் தனது பிள்ளைகளுக்கு வேலைக்காரியால்; அறிவையும்> ஒழுக்கத்தையும் ஊட்டி வளர்க்க முடியாது !

வீட்டை விட்டு வெளியேறி வேலைக்குச் சென்று விடுவதால் தானும் கண்ணியமிழந்து> தான் பராமரித்து ஒழுக்கத்துடன் வளர்க்க வேண்டிய குழந்தைகளும் ஒழுக்கம் கெட்டவர்களாகி பிற்காலத்தில் அவர்களது சேட்டைகளால் இவர்களுக்கு தலைகுணிவு ஏற்படுகிறது.

இறுதியாக...
பெண் குழந்தைகளை பருவ வயது வரை கல்வி கற்கச்செய்து> பூப்பெய்ததிலிருந்து திருமணத்திற்கு இடைப்பட்ட காலம் வரை வீட்டில நல்லொழுக்கப் (ஆண்மீக) பயிற்சியை> அல்லது மதரஸாக்களில் ஆண்மீக கல்வியை அளித்து திருமனம் செய்து வைத்தால் அந்தப் பெண்ணால் ஒழுக்கமிக்க உறுப்பினர்களைக் கொண்ட கண்ணியமிக்க குடும்பத்தை உருவாக்க முடியும்.

அழகும்> வனப்பும் வாய்ந்த விலை மதிக்க முடியாத பொக்கிஷத்தை மனைவியை அற்ப கிரயத்திற்காக (வேலைக்கு அனுப்பி) பொக்கிஷத்தின் பவரை இழக்கலாமா ? சிந்திக்க வேண்டியவர்கள் சிந்தித்து இஸ்லாமிய அடிப்படையில் தங்களுடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்டு ஒழுக்க சீலர்களாக வாழ்வதற்கு முன்வருவார்களா ? உலகப் பொருள்களில் மிகச்சிறந்தது நல்ல பெண்மணி ஆவாள் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: முஸ்லிம

உலகம் முடியும் காலம்வரை இஸ்லாமிய சட்டம் நடைமுறைப் படுத்த சாத்தியமானதே ! அது ஏகஇறைவனின் சட்டமாகும் அதற்கு மாற்றமான சட்டமே நடைமுறைப்படுத்த சாத்தியமற்றது என்பதை பர்தா சட்டத்தை மீறும் பெண்களுடைய அவலநிலையை இன்று உலக ஊடகங்கள் படம் பிடித்துக் காட்டுகின்றன.



وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்